Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொய் பேசி பேசி பட்டாணி சாப்பிட்டது போதும்... காண்டான கார்த்தி சிதம்பரம் !

பொய் பேசி பேசி பட்டாணி சாப்பிட்டது போதும்... காண்டான கார்த்தி சிதம்பரம் !
, சனி, 20 பிப்ரவரி 2021 (10:35 IST)
காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியினர் சக நிர்வாகிகளிடம் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். காங்கிரஸில் 70 லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள் என பொய்யாக அறிக்கை கொடுத்துவிட்டார்கள். இதை நம்பி 2016 ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்று விட்டேன். 
 
ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்களே நமக்கு ஓட்டு போடவில்லை. 70 லட்சம் உறுப்பினர்களுக்கு பொய்யாக சந்தா தொகை செலுத்தி பழைய பேப்பர்களை டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள். அங்கு டெல்லியில் இந்த பேப்பரை வைத்து பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். 
 
ஆகையால் காங்கிரஸ் என்பது பெரிய பொய். எனவே, காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சக்ரா - திரை விமர்சனம்