Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவுடன் நன்கொடை: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு!

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவுடன் நன்கொடை: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு!
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:14 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு உடன் நன்கொடை அளிக்கலாம் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் அதிமுக திமுக மக்கள் நீதி மய்யம் உள்பட ஒருசில கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது விரைவில் இந்த கட்சிகள் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் காண இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருப்பதாக கூறப்படும் காங்கிரஸ் கட்சியும் விருப்ப மனு விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 25 முதல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றும் விருப்ப மனுவுடன் இணைத்து நன்கொடை தொகையையும் செலுத்தலாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் அறிவித்துள்ளார்
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதா என்பதை இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் விருப்ப மனு குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி ஊர்வலம்: கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்!