Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகா : தமிழகத்திற்கு தண்ணீர் தர மீண்டும் மறுப்பு (வீடியோ)

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகா : தமிழகத்திற்கு தண்ணீர் தர மீண்டும் மறுப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகா : தமிழகத்திற்கு தண்ணீர் தர மீண்டும் மறுப்பு (வீடியோ)
, புதன், 28 செப்டம்பர் 2016 (11:50 IST)
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் மீண்டும் மறுத்துள்ளது.


 

 
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவை நிறைவேற்றாமல், கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. 
 
ஆனால் கர்நாடகாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டபேரவை தீர்மானம் உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என்று கூறி குட்டு வைத்தது. மேலும், இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு 6000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று இன்று உத்தரவிட்டது. மேலும், காவிரி விவாகரத்தில் இரு மாநில தலைமை செயலாளர்கள் இடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் படி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
 
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா இன்று பெங்களூரில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். முடிவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது என்றும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
 
இந்நிலையில், இரு மாநிலங்களுக்கிடையே டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது மத்திய அரசு. அந்த பேச்சு வார்த்தையின் முடிவில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
வீடியோ:

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பான் கார்டு முகவரியை ஆன்லைனில் மாற்றும் வழிமுறைகள்