Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி. மெழுகுச்சிலையுடன் புகைப்படம்

முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி. மெழுகுச்சிலையுடன் புகைப்படம்
, வியாழன், 19 அக்டோபர் 2017 (19:19 IST)
திமுக தலைவர் கருணாநிதி  கடந்த சில மாதங்களாக உடல்நலம் மற்றும் முதுமை காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்து வரும் நிலையில் சற்றுமுன்னர் அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு சென்றார். 



 
 
முரசொலி பவளவிழாவை அடுத்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்ட கருணாநிதி அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது மெழுகுச்சிலையை பார்வையிட்டார். அத்துடன் மெழுக்குசிலையுடன் அவர் புகைப்படமும் எடுத்து கொண்டார்.
 
சுமார் ஒரு ஆண்டுக்கு பின்னர் கருணாநிதி முரசொலி அலுலகத்திற்கு வந்துள்ள செய்தி அறிந்த திமுகவினர் ஆயிரக்கணக்கில் முரசொலி அலுவலகம் முன் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றம்: நடுத்தெருவுக்கு வந்த நூற்றுக்கணக்கான குடும்பம்