Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார் கருணாநிதி

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (10:59 IST)
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது கொள்ளுப்பேரன் மனோரஞ்சித் மற்றும் விக்ரம் மகள் அக்ஷிதா திருமணத்தை தனது கோபாலபுரம் வீட்டில் நடத்தி வைத்தார்.


 
 
சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனும், மு.க.முத்து-சிவகாமசுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவன தலைவர் சி.கே.ரங்கநாதன் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
 
இந்த நிலையில் இன்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் சற்றுமுன்னர் மனோரஞ்சித்-அக்ஷிதா திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார். இந்த திருமணத்தில் திமுக பிரபலங்கள் மற்றும் விக்ரமின் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி முரசொலி அலுவலகம் சென்றார். அதனையடுத்து இன்று திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளார். வெகுவிரைவில் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சிம்மக்குரலில் கர்ஜிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்