Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, ஸ்டாலின் தலைமையில் இரண்டு அணிகள்: கராத்தே தியாகராஜன்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:55 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என சற்றுமுன் ரஜினியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் அவ்வப்போது ரஜினியை சந்திப்பது உண்டு. அந்த வகையில் முரசொலி கட்டுரையால் ரஜினியும் திமுகவும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியின் தலைவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் ரஜினியை சந்தித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், 'வரும் தேர்தலில் ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என்றும் பாஜகவின் ஊதுகுழலாக கமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

திமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்ட கமல், ரஜினி கூட்டணியிலும் சேர வாய்ப்பில்லை என்பதால் அவர் எந்த கூட்டணியில் இருப்பார் என்பது புரியாத புதிராக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments