ரஜினி, ஸ்டாலின் தலைமையில் இரண்டு அணிகள்: கராத்தே தியாகராஜன்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:55 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என சற்றுமுன் ரஜினியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் அவ்வப்போது ரஜினியை சந்திப்பது உண்டு. அந்த வகையில் முரசொலி கட்டுரையால் ரஜினியும் திமுகவும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியின் தலைவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் ரஜினியை சந்தித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், 'வரும் தேர்தலில் ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என்றும் பாஜகவின் ஊதுகுழலாக கமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

திமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்ட கமல், ரஜினி கூட்டணியிலும் சேர வாய்ப்பில்லை என்பதால் அவர் எந்த கூட்டணியில் இருப்பார் என்பது புரியாத புதிராக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments