Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன அதிகாரி

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:44 IST)
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 189 பேரி பலியான நிலையில் அதில் பயணிக்க இருந்த அரசு அதிகாரி ஒருவர் விமானத்தை தவறவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாக கூறியுள்ளார்.
 
இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் JT610 பயணிகள் விமானம் 6 பணிப்பெண்கள், 2 விமான ஓட்டிகளுடன் சேர்த்து 189 பேருடன் பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டு சென்ற நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 189 பேரும் பலியாகினர். இறந்தவர்களின் உடல்களை மீட்க மீட்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் விபத்துள்ளான விமானத்தை தவறவிட்ட இந்தோனேசிய நிதி அமைச்சக அதிகாரியான சோனி செடியாவான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.
 
இதுகுறித்து பேசிய அவர் இந்த விமானத்தில் தான் நான் பயணம் செய்திருக்க வேண்டியது. இருப்பினும் வீட்டிலிருந்து காரில் வரும் போது டிராபிக் அதிகமாக இருந்ததால் விமானத்தை பிடிக்க முடியவில்லை. நல்ல வேலையாக விமானத்தை தவறவிட்டதால் பெரும் விபத்திலிருந்து தப்பித்துள்ளேன் என படபடப்புடன் அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments