Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் குறித்து அவதூறு... கைது பயத்தால் கனல் கண்ணன் மிஸ்ஸிங்?

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (10:44 IST)
பாஜக நிர்வாகி கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பின்னர் உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டாலும், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கே அதிமுகவினர் ஆதரவளித்தனர்.

சமீபத்தில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் பாஜக நிர்வாகியுமான கனல் கண்ணன் பாஜக கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆம் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களில் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரில் கனல் கண்ணன் மீது போலீஸார் ஒரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments