Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி லாவண்யா மரணத்திற்கு பொறுப்பேற்பது யார்? – கமல்ஹாசன் கேள்வி!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (12:11 IST)
தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பொறுப்பேற்பது யார் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி லாவண்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை விவகாரத்தில் மாணவியை விடுதியில் அதிக வேலை வாங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் மதமாற்றம் செய்ய முயன்றதால் மாணவி இறந்ததாக அவரது பெற்றோர் கூறியுள்ள நிலையில் பாஜகவினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் “சிறுமி இறந்ததற்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கதானே தவிர, கழிவறைகளை சுத்தம் செய்யவோ, மத அறிவை பெறுவதற்கோ அல்ல” என கூறியுள்ளார்.

”மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கான காரணத்தை நேர்மையாகவும் துரிதமாகவும் விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராதபடி அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments