Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகக்காரர்கள் மிரட்டுகிறார்கள்!?? – கமல்ஹாசன் பகீர் குற்றச்சாட்டு!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (11:37 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மய்யத்தாரை திமுகவினர் மிரட்டியதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. பாமக, தேமுதிக, மநீம, நாதக உள்ளிட்ட கட்சிகளும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் திடீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் “பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மநீம சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவங்களுக்கு வேலை.. எங்களுக்கு வெயிட்டிங் லிஸ்டா? – சு.வெங்கடேசன் கண்டனம்!