Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு? கமல்ஹாசன்

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு? கமல்ஹாசன்
, திங்கள், 22 ஜூன் 2020 (20:10 IST)
தமிழகத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று காலை வெளியானது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பில் முதல் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார். அதுமட்டுமன்றி கௌசல்யாவின் தாயார் மீதான மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கௌசல்யாவின் தந்தை, தாய் ஆகிய இருவருமே இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடப்பட்டது. அதுமட்டுமின்றி தூக்கு தண்டனை பெற்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் நெட்டிசன்களை பரவலாக பரவி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தீர்ப்பு குறித்து கூறியிருப்பதாவதுள்
 
ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 2700ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?