Publish Date: Wed, 07 Jul 2021 (20:15 IST)
Updated Date: Wed, 07 Jul 2021 (20:16 IST)
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் மத்திய அமைச்சரவையில் தமிழர் ஒருவர் இடம்பெற்றிருந்தும் மகிழ்ச்சி இல்லை என்றும் இதனால் நாட்டுக்கு என்ன பயன் என்றும், பாஜகவிற்கு தான் பலன் என்றும் என்று பதிவு செய்துள்ளார். அவருடைய வீட்டில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும்.
ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?