நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது.. எண்ணூரில் ஆய்வு செய்த கமல்ஹாசன்

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (10:24 IST)
நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது என எண்ணூர் காட்டுகுப்பம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு செய்தார்.

எண்ணூரில் எண்ணெய் கசிவுகள் நடந்த இடத்தில் படகில் சென்று பார்வையிட்ட கமல்ஹாசன் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இங்கு நான் பலமுறை வந்துள்ளேன், நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.

இங்குள்ள கழிவுகளை அகற்ற டெக்னீசியன்கள் இல்லை. மீனவர்களே கழிவுகளை அகற்றி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் இதுபோல நடக்கும் போது நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது. எண்ணெய் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.

எண்ணெய் கழிவை சுத்தம் செய்ய வேண்டியது மீனவர்கள் அல்ல, அதற்கு டெக்னீசியன்கள் தேவை, இயற்கை என கூறி தப்பிக்க முடியாது. ஏழு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை தான் இன்றும் உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments