Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன்: கமல்ஹாசன் டுவீட்

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:57 IST)
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்பட்டு வருவது குறித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்பதும் அதில் 4 மீனவர்கள் பரிதாபமாக பலியாகினர் என்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பதும் பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன். பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு செய்யவேண்டும்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments