Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டு யானையை உயிரோடு கொளுத்திய கொடூரம்! – பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:36 IST)
தமிழகத்தின் யானைகள் சரணாலயமான முதுமலையில் காட்டுயானை உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன, இந்நிலையில் யானைகள் சரணாலயமான முதுமலையில் உள்ள முசினக்குடி பகுதியில் தீ காயங்களுடன் சில மாதங்களாக சுற்றி வந்த காட்டு யானை ஒன்று கடந்த 19ம் தேதி உயிரிழந்தது.

இந்நிலையில் காட்டு யானை மீது ஆசாமிகள் சிலர் தீ வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானையை விரட்ட டயரில் தீ வைத்து யானை மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனால் டயர் உருகி யானை மீது ஒட்டிக்கொண்டதால் யானைக்கு அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments