Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழிபோடும், பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (12:40 IST)
பழி போடும் மற்றும் பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 
பழி போடும் அரசியல் மற்றும் பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வழிதேடும் அரசியல் மற்றும் வழிகாட்டும் அரசியலுக்கு துவக்க உரையை சேர்ந்து எழுத வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் 4வது ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் இதற்காக சென்னையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
மண்ணையும் மொழியையும் மக்களையும் காக்க தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு அணிதிரள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட ஒரு சில பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments