Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

Mahendran
வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (17:16 IST)
உலகநாயகன் கமல்ஹாசன், தி.மு.க. ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினர் ஆன பிறகு, இன்று திடீரென பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த சந்திப்பை மரியாதை நிமித்தமாகவே மேற்கொண்டதாக கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, கீழடி அகழாய்வு விவகாரத்தில் பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கமல்ஹாசன் தனது பதிவில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும், தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்தேன். அவற்றுள் தலையானது, கீழடி அகழாய்வு. 
 
தமிழின் தொன்மையையும், தமிழர்களின் நாகரிகத்தின் பெருமையையும் உலகுக்கு உரக்க சொல்லும் இந்த முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.
 
தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு,  பிரதமரை கமல்ஹாசன் நேரடியாக சந்தித்தது, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments