Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

Siva
வெள்ளி, 21 ஜூன் 2024 (19:37 IST)
கள்ளக்குறிச்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை தாக்க முயற்சி செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்ற சாட்டை துரைமுருகன் கள்ளக்குறிச்சி சென்றார். அப்போது கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கருணாபுரம் கிராம மக்கள் சிலருக்கும், சாட்டை துரைமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
 
வாக்குவாதத்தின் போது சாட்டை துரைமுருகனை தாக்க முயன்ற இளைஞரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இருவரையும் சமாதானம் செய்து, சாட்டை துரைமுருகனை பொதுமக்கள் காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரண நிதி ஏன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதுதான் பரபரப்பு ஏற்படுத்தியது என்றும் இதனால் தான் அந்த இளைஞர் சாட்டை துரைமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments