Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றவர் தப்பியோட்டம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!

கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றவர் தப்பியோட்டம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!

Siva

, வெள்ளி, 21 ஜூன் 2024 (14:05 IST)
கள்ளச்சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் திடீரென தப்பியோடியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நபர் தப்பியோடி தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் சிகிச்சை பெற்று வந்தவர் தப்பியோடியது தொடர்பாக மருத்துவமனையில் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், தப்பியோடிய நபரை தீவிரமாக போலீசார் தேடி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அறிந்து 49 பேர் பலியாகி உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் திடீர் என தலைமறைவாகியுள்ளார். அவர் தலைமறைவானதற்க்கு  என்ன காரணம்? சிகிச்சையில் இருந்த அவர் திடீரென ஏன் மருத்துவமனை விட்டு யாருக்கும் தெரியாமல் ஏன் வெளியேறினார் என பல கேள்விகள் எழுந்துள்ளது.
 
 சிகிச்சை பெற்ற ஒருவர் திடீரென தலைமறைவாகியுள்ளது மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் சென்னையில் இருந்து வந்ததா? திடுக்கிடும் தகவல்.!