Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலூர் மக்களவை தேர்தல்: மீண்டும் களம் காண்கிறார் கதிர் ஆனந்த்

வேலூர் மக்களவை தேர்தல்: மீண்டும் களம் காண்கிறார் கதிர் ஆனந்த்
, சனி, 6 ஜூலை 2019 (12:40 IST)
வேலூரில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் மீண்டும் கதிர் ஆனந்த வேட்பாளராக களம் இறங்குகிறார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூருக்கும் தேர்தல் நடந்திருக்க வேண்டும். அப்போது திமுக வேட்பாளராக களம் இறங்கியவர் கதிர் ஆனந்த. அந்த சமயம் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவர் மகன் கதிர் ஆனந்த் வீடுகளில் வருமானவரி துறை ரெய்டு நடத்தியது. இதில் கதிர் ஆனந்த் உறவினர்கள் வீட்டில் 10 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் என கூறப்பட்டதால் வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

நேற்று வேலூர் சட்டமன்றத்திற்கான தேர்தல் ஆக்ஸ்டு 8 ம் தேதி நடைபெறும் என அறிவித்ததையடுத்து மீண்டும் திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்கள் – ஜெய்ப்பூரில் ஆச்சர்ய சம்பவம்