Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் திரையரங்கு திறப்பது எப்போது? மழுப்பும் கடம்பூரார்!

தமிழகத்தில் திரையரங்கு திறப்பது எப்போது? மழுப்பும் கடம்பூரார்!
, வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:44 IST)
மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பின்னரே திரையரங்குகளை திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என தகவல். 
 
திரையரங்குகளை திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கடந்த மாதம், செப்டம்பர் 1ம் தேதி மத்திய அரசு திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும், அதை தொடர்ந்து தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது மற்றும் அதற்கான விதிமுறைகள் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறினார். 
 
ஆனால் இப்போது வரை திரையரங்குகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை, ஆனால் அதற்குள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மோத உருவாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சற்று முன் அளித்த பேட்டியில், 
 
மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பின்னரே திரையரங்குகளை திறப்பது பற்றி முடிவு செய்யப்படும். திரையரங்கு திறக்கப்படும் போது மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனில் பாதிப்பு ஏற்படும் என இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்களாவது நீட்டை ரத்து செய்யுங்க! ஜெயலலிதா சிலையிடம் மனு அளித்த மாணவர்கள்