Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபடி போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரர்: நிதியுதவி அறிவித்த முதல்வர்!

Mk Stalin
, திங்கள், 20 பிப்ரவரி 2023 (14:14 IST)
கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது” குளித்தலை வட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூர் என்ற பகுதியில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்ட மாணிக்கம் என்ற 26 வயது நபர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். 
 
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவு கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் 
 
உயிரிழந்த கபடி விளையாட்டு வீரரின் குடும்பத்தினருக்கு தனது எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு ரூபாய் 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான்; கேசிஆர் தான் தலிபான் - ஒய்.எஸ்.ஷர்மிளா கடும் விமர்சனம்!