Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (08:05 IST)
சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம்
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டதை அடுத்து தற்போது சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தவும் கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதன்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது அது ஜூன் 30ஆக மாற்றப்பட்டுள்ளது
 
இதுகுறித்த உத்தரவை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மூன்று மாத கால அவகாசத்திற்கு எந்த வித அபராதமும் விதிக்கப்படாது எனவும் தமிழக அரசு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இருப்பினும் இந்த ஆண்டு மட்டும் சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments