Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (17:46 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி குறித்த அறிவிப்பை சற்றுமுன் மின்வாரியம் அறிவித்துள்ளது
 
ஜூன் 19 முதல் ஜூன் 30 முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஜூலை 15 ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்த கால அவகாசம் காரணமாக 4 மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
மேலும் கடந்த 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மின்  கணக்கீட்டு தேதி உள்ள நுகர்வோர்களுக்கு, முந்தைய மாத மின் கட்டணம் கணக்கிடப்படும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கட்டண வசூல்  மையங்கள்  வரும் 30 ஆம் தேதி வரை செயல்படாது என்றும், அதனால் இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்துமாறும் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதே நேரத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு இந்த கால அவகாசம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments