Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தாரை வாழவைக்கும் சென்னையில் கொரோனாவும் வாழட்டும்: உதயநிதி டுவீட்

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (17:04 IST)
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவ்வபோது தனது டுவிட்டரில் ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகம் விமர்சனம் செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் சற்றுமுன் உதயநிதி பதிவு செய்த ஒரு டுவீட்டில் ‘தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்’ என்கிறது அரசு. உண்மை நிலவரமோ அச்சுறுத்துகின்றன. ‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என்பார்கள். ‘கொரோனாவும் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்’ என்று 
தமிழக முதல்வர் விட்டுவிட்டாரோ என்னவோ’ என்று பதிவு செய்துள்ளார்.
 
உதயநிதி ஸ்டாலினின் இந்த டுவிட்டுக்கு கமெண்டுக்கள் குவிந்து வருகிறது. அதில் பெரும்பாலான கமெண்ட்டுக்கள் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலர் சென்னையின் பரிதாபமான நிலை குறித்து வருத்தத்துடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments