Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

Advertiesment
தமிழ்நாடு அரசியல்

Siva

, வியாழன், 5 ஜூன் 2025 (18:25 IST)
பிரபல பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதமாகி வருகின்றன. 
 
1996-ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு  ஒருமணி நேரத்திற்கு முன்பே டிராபிக் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் சிக்கல்களை சந்தித்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
 
இப்போது, அதே பாணியில் தமிழக முதலவர் ஸ்டாலின் ‘ரோட் ஷோ’ நடத்துவதாக கூறி, நகரப் போக்குவரத்தை தடைபடுத்துகிறார் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
 
30 வருடங்களுக்கு முன் ஜெயலலிதா செய்த தவறையே தற்போது ஸ்டாலின் செய்கிறார் என்றும், இதற்கெல்லாம் ஒரு காரணம் விஜய்யை கண்டு அச்சம் தான் ஏற்படுகிறது எனவும், இதற்குப் பின்னணி வேறு ஒன்றில்லை என்றும், நடிகர் விஜய் தனது ரோட்ஷோவில் பெற்ற ஆதரவை பார்த்து கலக்கம் அடைந்த திமுக, அதற்கு பதிலடியாக இதைப் போன்று ஜனக்கூட்டம் காண்பிக்கும் நிகழ்வுகளை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
 
மக்கள் ஆதரவை நிரூபிப்பதற்கான முறையான வழியல்ல இது என்றும், இந்த அணுகுமுறை தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!