Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போராட்டத்தின் போது தாக்கப்பட்ட ஜோதிமணி? மருத்துவமனையில் அனுமதி!

போராட்டத்தின் போது தாக்கப்பட்ட ஜோதிமணி? மருத்துவமனையில் அனுமதி!
, சனி, 18 ஜூன் 2022 (13:03 IST)
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணை நடைபெற்று வரும் அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி பலத்த காவல் போடப்பட்டுள்ளதுடன் 144 தடை உத்தரவும் உள்ளது.
 
இந்நிலையில் ராகுல்காந்தியை விசாரிப்பதை எதிர்த்து ஜோதிமணி எம்.பி தலைமையில் காங்கிரஸ் மகளிரணி அமலாக்கத்துறையை முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீஸார் ஜோதிமணி எம்.பியை தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது.
 
இதனைத்தொடர்ந்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அமலாக்கத்துறையை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது போலீசாரால் ஜோதிமணி தாக்கப்பட்டார் என தெரிகிறது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Internet Explorer-க்கு கல்லறை - இணையத்தில் வைரல்!