Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை!

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (12:02 IST)
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸில் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்ற பிறகு இரண்டு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அப்போது ஒரு கும்பல் நகைக்கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு முதல் தளத்தில் நுழைந்து அங்கிருந்த நகைகளை  கொள்ளையடித்து சென்றுள்ளனர். 
 
திருடப்பட்ட நகைகள், அதன் மதிப்பு குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் மற்றும் டிஐஜி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குச்சிபாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்வரை கைது செய்து ஏற்கனவே போலீசார் விசாரித்து வரும் நிலையில் தற்போது டீக்காராமன் கூட்டாளிகளான கண்ணன், பிரபு, வசந்த் உட்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments