Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 கிலோ நகைகள் கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்த போலீஸார்

15 கிலோ நகைகள் கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்த போலீஸார்
, வியாழன், 16 டிசம்பர் 2021 (18:22 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் 15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூர், ஆந்திராவுக்கு போலீஸார் விரைந்துள்ளனர்.

 வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஜோஸ் ஆலூகாஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வழக்கம் போல காலையில் கடையைத் திறந்தபோது, ஷோகேஷில் வைக்கப்பட்டிருந்த  30 கிலோ நகைகள் திருட்டுப் போயனது.. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம்  தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் நேற்று காலை 15 கிலோ நகைகள் திருட்டு போனது. இதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கடையில் உள்ள சுவரில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்தது சென்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன்படிப்படையில்  தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் புரட்சிகரமானது… ராமதாஸ் பாராட்டு!