Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்! – கேரள அமைச்சர் கெடுபிடி!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (13:31 IST)
சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என கேரள அமைச்சர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியாகும் வரை பெண்கள் சபரிமலைக்கு செல்ல தடையில்லை என தெரிவித்திருந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை செல்ல விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது குறித்து தெரிவித்துள்ள சபரிமலை தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ”சபரிமலைக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு தர முடியாது. நீதிமன்றத்தில் உரிய அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்” என கண்டிப்பாக சொல்லியிருக்கிறார்.

தீர்ப்பு வெளியாகும் வரை பெண்களை அனுமதிக்க கூடாது என்று சில அமைப்பினர் கேரள அரசை வலியுறுத்தி வரும் நிலையில் அமைச்சர் இப்படி சொல்லியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி.. பாஜக மூத்த தலைவர் கருத்து..!

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments