Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 25 April 2025
webdunia

மாஸாய் வீசும் ஜெகன் அண்ணா வேவ்ஸ்... ஆந்திராவில் இல்ல இம்முறை தமிழகத்தில்!

Advertiesment
JeganMohan Reddy
, திங்கள், 4 நவம்பர் 2019 (12:35 IST)
தமிழகத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பேரவை துவங்குவதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திராவில் நடைபெற்ற முடிந்த சட்டபேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக பதவியேற்றது முதல் ஜெகன் மோகன் ரெட்டி மக்களுக்காக பல அதிரடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். 
 
இந்நிலையில், தமிழகத்தில் பாஸ்கர் என்பவர் பேஸ்புக் மூலமாக ஜெகன் மோகன் ரெட்டி பேரவை எனும் பெயரில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். அதன்படி வாணியம்பாடியில் திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. 
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநில பிரச்சார அணி தலைவர் ராஜா கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மக்களுக்கு ஆற்றி வரும் சிறப்பான ஆட்சி மற்றும் சலுகைகள் குறித்து விவரிக்கப்பட்டதோடு ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் காட்டின் பாதுகாவலர் சுட்டு கொலை