Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டும் கார் டிரைவர்! என் உயிருக்கு ஆபத்து – ஜெ.தீபா பரபரப்பு புகார்

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (11:33 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது முன்னாள் கார் டிரைவரும், கட்சி உறுப்பினருமான ராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை தொடங்கினார் ஜெ.தீபா. அப்போது அவரது கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஈ.சி.ஆர் ராமசந்திரன் மற்றும் ராஜா ஆகியோர். இதில் ராஜா முன்னதாக ஜெ.தீபாவிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்தவர். கட்சியில் இருந்தபோது அவர்களது நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கட்சியை விடுத்து அரசியலை விட்டு விலகி இருக்கிறார் ஜெ.தீபா. இந்நிலையில் ஈசிஆர் ராமசந்திரனும், டிரைவர் ராஜாவும் அடிக்கடி தீபாவிற்கு செல்போன் மூலமாகவும், நேரடியாகவும் மிரட்டல் விடுத்து வருவதாக ஜெ.தீபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments