Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் பண்ண எதுவுமே கிடைக்கலயா? இவ்ளோ மலிவான அரசியலா? – ஸ்டாலின் மீது விஜயபாஸ்கர் தாக்கு!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (11:08 IST)
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் மீதுவழக்கு தொடரப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அதிமுக தலைமை ஊழல் பணத்தை கொடுத்து வைத்திருந்ததாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் அறிக்கைக்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் “அமைச்சர் துரைக்கண்ணு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை அவரது மலிவான அரசியலை காட்டுகிறது. துரைக்கண்ணு சிகிச்சை பெற்ற காவேரி மருத்துவமனையில்தான் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியும் கடைசி காலங்களில் சிகிச்சை பெற்றார் என்பதை நினைவுப்படுத்துகிறேன். மேலும் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் குறித்து மருத்துவக்குழு அமைத்து நாங்கள் தீவிர பரிசோதனையும், சிகிச்சையும் அளித்த் வந்தோம்” என கூறியுள்ளார்.

மேலும் ”அரசியல் செய்வதற்கு எவ்வளவோ வழிகள் இருந்தும் மறைந்த அமைச்சரின் இறப்பை வைத்து மலிவான அரசியல் செய்யும் மாண்புமிகு எதிர்கட்சி தலைவரை தமிழகம் பெற்றுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments