Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவரை நாங்க பெருசா எடுத்துக்குறது இல்ல! – பொன்னாருக்கு ஜெயக்குமார் பதிலடி!

Advertiesment
அவரை நாங்க பெருசா எடுத்துக்குறது இல்ல! – பொன்னாருக்கு ஜெயக்குமார் பதிலடி!
, செவ்வாய், 14 ஜனவரி 2020 (12:46 IST)
தமிழகத்தில் வன்முறை பெருகிவிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு பதிலடி கூறும் விதத்தில் பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகத்தில் களியக்காவிளை பகுதியில் எஸ்.ஐ வில்சன் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆளும் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜகவை சேர்ந்த ஒருவர் இப்படி விமர்சித்து பேசியது கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு பதில் சொல்லும் வகையில் பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ”பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேசமயம் அவர் கருத்தை பாஜகவின் கருத்தாக பார்ப்பதும் இல்லை. மத்திய அரசுதான் தமிழகம் சட்டம் ஒழுங்கில் முதல் இடத்தில் உள்ளதாக விருது கொடுத்துள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசையே எதிர்த்து கருத்து சொல்லியுள்ளாரா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னதான் நடக்குது அங்க? – கே.எஸ்.அழகிரியை அழைத்த சோனியா காந்தி!