Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை சிறையில் உள்ள 29 மீனவர்களை விடுதலை செய்ய ஜெயலலிதா கோரிக்கை

இலங்கை சிறையில் உள்ள 29 மீனவர்களை விடுதலை செய்ய ஜெயலலிதா கோரிக்கை

Advertiesment
இலங்கை சிறையில் உள்ள 29 மீனவர்களை விடுதலை செய்ய ஜெயலலிதா கோரிக்கை
, சனி, 25 ஜூன் 2016 (15:22 IST)
இலங்கை சிறையில் உள்ள 29 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த 23 ஆம் தேதி நாகை மீனவர்கள் உள்பட 29 பேரை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்து சிறை அடைத்துள்ளனர். இதனால், அவர்கள் சிறையில் வாடி வருகின்றனர். மேலும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட  94 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
எனவே, இந்த விவகாரத்தில், விரைவாக நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்பார்வை இழந்தவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க கோரிக்கை