Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்: நீதிமன்றத்தில் மனு!

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்: நீதிமன்றத்தில் மனு!

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்: நீதிமன்றத்தில் மனு!
, வியாழன், 15 டிசம்பர் 2016 (16:43 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.


 
 
இதனையடுத்து நேற்று சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து புலனாய்வு குழு விசாரணை செய்ய வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
 
அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அந்த பொது நல மனுவில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் இது தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து செய்தித்தாள்களையும் ஆக்கிரமித்த ‘சின்ன அம்மா’ சசிகலா!