Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினகரனுக்கு புத்தி பேதலித்து விட்டது ; டிரம்ப்பை கூட அவர் நீக்குவார் - ஜெயக்குமார் கிண்டல்

Advertiesment
Jayakumar
டிடிவி தினகரனுக்கு புத்தி பேதலித்து விட்டது என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.


 

 
அதிமுகவின் இரு அணிகளுன் இணைந்த பின்பு, அவர்களுக்கும் தினகரன் தரப்பிற்கும் தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அவர் வசம் 20 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் உல்லாச விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
அதேபோல்,எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை ஒருவர் பின் ஒன்றாக பதவி நீக்கம் செய்து வருகிறார் தினகரன். இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார் “ அமெரிக்க அதிபர் டிரம்பை கூட தினகரன் நீக்கிவிடுவார். அதுதொடர்பான பிரேக்கிங் நியூஸ் விரைவில் வரும்” என கிண்டலாக கூறினார். 

webdunia

 

 
மேலும் “அவருக்கு புத்தி பேதலித்து விட்டது. புத்தி பேதலித்தால் விபரீதமான எண்ணம் ஏற்படும். இதை சமஸ்கிருதத்தில் ‘விநாசகாலே விபரீத புத்தி’ என்று கூறுவார்கள். அவரின் அழிவுக்கான நேரம் தொடங்கிவிட்டது” என பதிலளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குர்மித் ராம் ரஹீம் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு - பதட்டத்தில் ஹரியானா, பஞ்சாப்