Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 20 April 2025
webdunia

மே 2ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்

Advertiesment
Jawaharullah
, வியாழன், 28 ஏப்ரல் 2022 (19:20 IST)
மே 2ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  
 
 "தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் திருநாள் வரும் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படவிருகிறது. வரும் ஏப்ரல் 30, மே1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் மே 2 திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது.
 
அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே முதல்வர் இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' 
 
இவ்வாறு ஜவாஹிருல்லா அந்த கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டியலினத்தவர் என போலி சான்றிதழ்: அணு ஆராய்ச்சி நிலைய ஊழியருக்கு கட்டாய ஓய்வு