Publish Date: Thu, 04 Jan 2024 (08:19 IST)
Updated Date: Thu, 04 Jan 2024 (08:20 IST)
தமிழகத்தில் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த பணம் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்த மாதம் முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
பொங்கல் திருநாள் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஜனவரி 13ஆம் தேதி இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே பொங்கல் பரிசு மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மட்டுமின்றி மகளிர் உரிமை தொகையும் பொங்கலுக்கு முன்பே கிடைக்க உள்ளதால் மகளிர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.