Publish Date: Thu, 13 Jan 2022 (16:30 IST)
Updated Date: Thu, 13 Jan 2022 (16:33 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 25 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
இந்நிலையில், இந்த வருடம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார்550 காளைகள் பங்குபெற்றன. இந்த ஜல்லிக்கட்டி விளையாட்டியில் கலந்துகொண்ட 25 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தப் போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.