Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் அடைக்கப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்: என்ன ஆகும் போராட்டம்?

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (09:36 IST)
கடந்த சிலநாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். நீதிமன்ற எச்சரிக்கை, தமிழக அரசின் அறிவுரைகளை மீறி போராட்டம் நடத்தும் இந்த அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
 
இந்த நிலையில் போராட்டம் செய்தவர்கள் காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் இதுவரை விடுதலை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கோவையில் கைதுசெய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 11 பேருக்கு பிப்ரவரி 1-ம் தேதி வரை சிறையிலும், நெல்லையில் கைதான ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 5 பேருக்கு பிப்ரவரி 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலிலும் வைக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதால் இனி போராட்டம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் தற்காலிக ஆசிரியர்களை ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் பணியில் அமர்த்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments