Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் அடைக்கப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்: என்ன ஆகும் போராட்டம்?

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (09:36 IST)
கடந்த சிலநாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். நீதிமன்ற எச்சரிக்கை, தமிழக அரசின் அறிவுரைகளை மீறி போராட்டம் நடத்தும் இந்த அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
 
இந்த நிலையில் போராட்டம் செய்தவர்கள் காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் இதுவரை விடுதலை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கோவையில் கைதுசெய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 11 பேருக்கு பிப்ரவரி 1-ம் தேதி வரை சிறையிலும், நெல்லையில் கைதான ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 5 பேருக்கு பிப்ரவரி 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலிலும் வைக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதால் இனி போராட்டம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் தற்காலிக ஆசிரியர்களை ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் பணியில் அமர்த்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments