ஓபிஎஸ் உடன் ஜெ தீபா திடீர் சந்திப்பு.. மீண்டும் அரசியலா?

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (08:09 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திடீரென சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் என இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவில் உண்மையான அதிமுக எது என்பது தெரிந்துவிடும். 
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தனது கணவருடன் ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்துள்ளார். குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைப்பு விடுக்க ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்திக்க வந்ததாகவும் அரசியலை தாண்டி அவருடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது என்றும் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.
 
மேலும் அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஓ பன்னீர் செல்வம் சந்திப்பின்போது அவர் அதிமுக மற்றும் அரசியல் குறித்து பேசி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து மீண்டும் அவர் தீவிர அரசியலில் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மற்றபடி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments