Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்வதே நல்லது! - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Prasanth Karthick
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (11:39 IST)

தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில் ஆங்காங்கே நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் நாய்களை பிடித்துக் கொன்றுவிடுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், அவ்வாறு கொலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

 

அதற்கு பதிலாக நாய்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் கருத்தடை சிகிச்சைகளை செய்துவிடுவது என்று திட்டமிடப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் அனைத்து நாய்களையும் பிடித்து கருத்தடை செய்வது இயலாத காரியமாகவே உள்ளது. பல பகுதிகளில் ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள் பிற நாய்களை கடிப்பதாலும், மனிதர்களை கடிப்பதாலும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது.

 

இதுகுறித்து பேசியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆபத்தான நாட்களை கருணைக் கொளை செய்வதே சரியான தீர்வாக அமையும். தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிகளில் நாய்க்கடியும் ஒன்றாக மாறியுள்ளது. மக்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

சென்னை வந்த விமானம் மீது விழுந்த லேசர் லைட்.. நிலைகுலைந்த விமானி.. அதிர்ச்சி தகவல்..!

வெள்ளத்தால் கரைந்த மொத்த உப்பு.. ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனை.. அண்டை நாட்டுக்கு கைகொடுத்த இந்தியா..!

இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லையாம்! எந்த நாடு தெரியுமா? - அமெரிக்க புலனாய்வு அமைப்பு ரிப்போர்ட்!

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments