Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சி திமுக மாநாடு… ஐபேக் குழுவினரோடு கருத்து வேறுபாடா ? கே என் நேரு பதில்!

திருச்சி திமுக மாநாடு… ஐபேக் குழுவினரோடு கருத்து வேறுபாடா ? கே என் நேரு பதில்!
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:30 IST)
திருச்சி அருகே திமுக மாநாடு நடத்துவதில் திமுகவினருக்கும் ஐபேக் குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையே உள்ள சிறுகனூர் என்ற இடத்தில் திமுக நடத்தும் பிரம்மாண்டமான மாநாடு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. முதலில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நடக்க இருந்த மாநாடு பின்னர் 400 ஏக்கராக மாறியது. அதனால் பணிகள் முடிய தாமதமானதால் பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால் இப்போது மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மாநாடு விஷயத்தில் குறுக்கிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு எதிராகப் பேசுவதே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதை மாநாட்டை தலைமையேற்று நடத்தும் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே என் நேரு மறுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Fastag போடு இல்லனா டபுள் கட்டணத்தை கொடு : மத்திய அரசு கெடுபிடி !