Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாதியின் செல்போன் ஆந்திராவில் உள்ளதா?: தனிப்பைடையினர் விரைவு

சுவாதியின் செல்போன் ஆந்திராவில் உள்ளதா?: தனிப்பைடையினர் விரைவு
, வெள்ளி, 1 ஜூலை 2016 (11:54 IST)
சுவாதியின் செல்போன் ஆந்திரா மாநிலத்தில் இருப்பதாக சந்தேகப்பட்டு காவல்துறை தனிப்படை ஒன்று ஆந்திரா மாநிலத்துக்கு சென்றுள்ளது.


 

 
சுவாதியின் கொலை வழக்கில் குற்றவாளியை இன்னும் ஒரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வெரு விதமான செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது சுவாதியின் செல்போன் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு அவரது செல்போன் சம்பவ இடத்தில் இல்லாததால், அவரது செல்போனை கொலையாளி எடுத்து சென்றிருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் சுவாதியின் நண்பர் ஒருவர் சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு போன் செய்துள்ளார். அப்போது போனை எடுத்த நபர் பேசாமல் அழைப்பை துண்டித்துள்ளார்.
 
அந்த செல்போன் ஆந்திராவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறை தனிப்படை ஒன்று குற்றவாளி ஆந்திரா மாநிலத்தில் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு ஆந்திராவுக்கு விரைந்து சென்றுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதியை ஒரு நபர் கன்னத்தில் அடித்தார்: அதிர்ச்சி தகவல்