Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெய்யக்காலமா இது? கொட்டும் மழையால் மதுரை மக்கள் குழப்பம்! – வைகை கரையோரங்களில் வெள்ள எச்சரிக்கை!

Prasanth Karthick
சனி, 11 மே 2024 (19:19 IST)
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.



கோடைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த ஏப்ரல் முதலாகவே வெயில் வாட்டி வரும் நிலையில் இந்த மாதம் அக்கினி நட்சத்திரமும் தொடங்கியதால் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்தது. கடந்த வாரம் வரை வெயில் பாடாய் படுத்தி வந்த நிலையில் இந்த வாரம் தொடங்கியது முதலே பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து பூமியையும், மக்களையும் குளிர்வித்து வருகிறது.

இந்நிலையில் இன்று மதுரையில் ஒருபடி மேலே போய் கனமழையாக கொட்டி வருவதால் மதுரையில் மழைக்காலம் போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவி வந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் தொடங்கி இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மதுரையில் பெய்து வரும் தொடர் மழையால் வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கொட்டித் தீர்த்த மழை மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments