அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒருநாள் கட்டாயம் வருவேன் என துர்கா ஸ்டாலின் கூறினாரா?

Siva
செவ்வாய், 16 ஜனவரி 2024 (08:38 IST)
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு ஒரு நாள் கட்டாயம் வருவேன் என அழைப்பிதழ் கொடுக்க சென்றவர்களிடம் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இதில் முக்கிய பிரம்மகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்க சென்றபோது துர்கா ஸ்டாலின் அந்த அழைப்பிதழை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டதாகவும்   ஒரு நாள் கண்டிப்பாக அயோத்தி கோவிலுக்கு வருவேன் என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவது எப்போது? முக்கிய தகவல்..!

பாஜக அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தேர்தலுக்காக திறக்க உள்ளதாக திமுக விமர்சனம் செய்த நிலையில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தேர்தல் முடிந்ததும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments