Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை விவகாரம்..வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:23 IST)
சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கணவன் பிரவீன் உயிரிழந்ததை தாங்க முடியாமல் மனைவி ஷர்மிளா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை  பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி ஷர்மிளா உயிரிழந்தார்.
 
இந்நிலையில் ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் ஷர்மிளா தற்கொலைக்கு பெற்றோர், சகோதரர்களே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில் தற்போது  ஷர்மிளா தற்கொலை விவகாரம் தொடர்பாக  வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை செய்து வருகிறார்.
 
முன்னதாக சென்னை பள்ளிக்கரணையில் சில மாதங்களுக்கு முன்பு பிரவீன் என்பவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் என்ற நிலையில் அவருடைய மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டார். பிரவீன் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவினுடைய தந்தையையும் மற்றொரு சகோதரனையும் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஷர்மிளாவின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments