விஜயபாஸ்கர் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையிடம் வழங்க கூடாது: லஞ்ச ஒழிப்புத்துறை

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:17 IST)
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகை, நகல்களை அமலாக்கத்துறை வசம் வழங்கக்கூடாது என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜர் ஆகினர்.

அப்போது குற்றப்பத்திரிகை நகல்கள், ஆதாரங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறை சார்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்ததற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தாங்கள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை, ஆதாரங்களை அமலாக்கத்துறையிடம் வழங்க கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments