Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயபாஸ்கர் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையிடம் வழங்க கூடாது: லஞ்ச ஒழிப்புத்துறை

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:17 IST)
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகை, நகல்களை அமலாக்கத்துறை வசம் வழங்கக்கூடாது என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜர் ஆகினர்.

அப்போது குற்றப்பத்திரிகை நகல்கள், ஆதாரங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறை சார்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்ததற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தாங்கள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை, ஆதாரங்களை அமலாக்கத்துறையிடம் வழங்க கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments