Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் சென்செக்ஸ் 1115 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் சென்செக்ஸ் 1115 புள்ளிகள் வீழ்ச்சி
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:43 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த திங்கள்கிழமை முதல் கடுமையாக சரிந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் சென்செக்ஸ் 1115 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இந்திய பங்குச் சந்தை கடந்த 3 நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. திங்கட்கிழமை 800 புள்ளிகளும் அதனை தொடர்ந்து செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்களும் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் திடீரென 1115 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து உள்ளது 
 
இதனால் தற்போது சென்செக்ஸ் 36 ஆயிரத்து 553 என்ற நிலையில் உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 326 புள்ளிகள் என்று சரிந்து 10,805 என்ற நிலையில் உள்ளது, வங்கி, நிதி, சேவை, தகவல் தொழில்நுட்பமும் உள்பட அனைத்து துறை குறியீடுகளும் இன்று சரிவடைந்தது என்பது குறிப்பிடட்ஜ்தக்கது 
 
இன்று ஒரே நாள் நாளில் பங்குச்சந்தை ஆயிரத்து 115 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது. மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதும், மேற்கத்திய நாடுகளில் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருப்பதாலும் பங்குச்சந்தை சரியக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் பங்குச்சந்தை இறங்கும் என்ற பீதியில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று தள்ளியதே இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோன் கட்டாததால் ....பெண்ணின் அந்தரங்க போட்டோகளை அனுப்பிய ஆன்லைன் கும்பல் !